News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

முக்கொம்புக்கு வந்த காவிரி நீரை மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்

Web Team by Web Team
August 16, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
முக்கொம்புக்கு வந்த காவிரி நீரை  மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்
Share on FacebookShare on Twitter

மேட்டூர் அணையில் இருந்து திருச்சி முக்கொம்பு அணையை வந்தடைந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து மூன்று லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து மழைப்பொழிவு குறைந்ததால் வரத்து நீரின் அளவும் குறைந்தது. இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்துவைத்தார்.

நொடிக்குப் பத்தாயிரம் கன அடி நீர் தொடர்ந்து திறந்துவிடப்பட்டுள்ளது. அந்த நீரும் பவானி ஆற்றில் வரும் நீரும் இணைந்து நேற்றிரவு கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள கதவணையை வந்தடைந்தது. இதனால் மாயனூர் அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டு நொடிக்குப் பத்தாயிரத்து எண்ணூறு கனஅடி நீர் வெளியேறி வருகிறது. இந்த நீர் இன்று காலை திருச்சி முக்கொம்பு அணையை வந்தடைந்தது.

முக்கொம்புக்கு புதுவெள்ளம் வந்ததையொட்டி விவசாயிகள் நெல், பூ, பழம் ஆகியவற்றைப் படைத்துச் சிறப்பு பூசைகள் செய்தனர். அதன்பின் அணைக்கு வந்த வெள்ளத்தை மலர் தூவி வரவேற்றனர். காவிரியில் தண்ணீர் வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதன்மூலம் தொடர்ந்து எட்டாவது ஆண்டாகத் தமிழகம் நெல் விளைச்சலில் சாதனை படைக்கும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது முக்கொம்பு அணையில் கொள்ளிடம் ஆற்றுக்குச் செல்லும் பிரிவில் 9 மதகுகள் உடைந்தன. இந்த மதகுகளைச் சீரமைக்கும் பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்கின. நொடிக்கு இரண்டு லட்சம் கன அடி நீர் வந்தாலும் தாக்குப்பிடிக்கும் வகையில் அணை மதகுகள் சீரமைக்கப்பட்டள்ளன. 95விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளன. முக்கொம்பு அணையின் அனைத்து மதகுகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

முக்கொம்பு அணையின் அனைத்து மதகுகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் இன்றிரவே கல்லணையை வந்தடையும். இதையடுத்துக் கல்லணையில் இருந்து கல்லணைக் கால்வாய், வெண்ணாறு, காவிரி, கொள்ளிடம் ஆகியவற்றில் டெல்டா பாசனத்துக்காக நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்ககள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

Tags: farmerskavery watermokombutrichy
Previous Post

பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

Next Post

ரோஜா,மஞ்சள் நிற பட்டாடையில் அத்திவரதர் தரிசனம்

Related Posts

கழிவுநீர் கலந்த குடிநீர்! 50 க்கும் மேற்பட்டரோருக்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை!
அரசியல்

கழிவுநீர் கலந்த குடிநீர்! 50 க்கும் மேற்பட்டரோருக்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை!

August 28, 2023
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் அரியவகை பாம்புகள், பல்லிகள் கடத்தல்!
இந்தியா

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் அரியவகை பாம்புகள், பல்லிகள் கடத்தல்!

July 31, 2023
எகிறி குதித்தேன் வானம் இடித்தது! ஆள விட்றா சாமி! திமுக மீட்டிங்கில் இருந்து சுவரேறி குதித்து ஓடிய உபிக்கள்!
அரசியல்

எகிறி குதித்தேன் வானம் இடித்தது! ஆள விட்றா சாமி! திமுக மீட்டிங்கில் இருந்து சுவரேறி குதித்து ஓடிய உபிக்கள்!

July 28, 2023
தென்னை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்
அரசியல்

தென்னை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்

June 30, 2023
திருச்சி திமுக தலைமைக்கு தலைவலி! முட்டிக்கொள்ளும் மூன்று பெரிய தலைகள்!
அரசியல்

திருச்சி திமுக தலைமைக்கு தலைவலி! முட்டிக்கொள்ளும் மூன்று பெரிய தலைகள்!

June 23, 2023
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் !
தமிழ்நாடு

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் !

February 14, 2023
Next Post
ரோஜா,மஞ்சள் நிற பட்டாடையில் அத்திவரதர் தரிசனம்

ரோஜா,மஞ்சள் நிற பட்டாடையில் அத்திவரதர் தரிசனம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version