News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இன்று கார்கில் போரின் 20 ஆம் ஆண்டு வெற்றி தினம் – சிறப்பு தொகுப்பு

Web Team by Web Team
July 26, 2019
in TopNews, இந்தியா, கட்டுரைகள், செய்திகள், வீடியோ
Reading Time: 1 min read
0
இன்று கார்கில் போரின் 20 ஆம் ஆண்டு வெற்றி தினம் – சிறப்பு தொகுப்பு
Share on FacebookShare on Twitter

இந்திய நாடு தனது ஆயுத பலத்தையும், அமைதியை விரும்பும் நிலைப்பாட்டையும் உலகுக்குக் காட்டிய கார்கில் போரின் 20-வது வெற்றி தினம் இன்று. தேசத்திற்கு பெருமை தேடித் தந்த நமது இராணுவ வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவு கூர்வோம் இந்த செய்தித் தொகுப்பில்…

1971ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையே நேரடியான போர்கள் எதுவும் நடைபெறாத நிலையில், கடந்த 1999 ஆம் ஆண்டின் மே 3 ஆம் தேதி, இந்தியாவின் எல்லைப் பகுதியான கார்கிலில், அந்நியர்கள் ஊடுருவியதாக ஆடு மேய்ப்பவர்கள் இந்திய பாதுகாப்புப்படையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

இராணுவ சீருடையில் இல்லாத அந்த அந்நியர்களை முஜாஹிதீன் தீவிரவாதிகள் என்றே முதலில் இந்திய பாதுகாப்புப்படை கருதியது. இதனால் ராணுவம் கார்கிலில் முழுவீச்சில் இறக்கப்படவில்லை. இதை பாகிஸ்தான் இராணுவம் பயன்படுத்திக் கொண்டது. மே 5 அன்று இந்திய இராணுவம் கார்கிலுக்கு அனுப்பிய ரோந்துக் குழுவில் இருந்த 5 வீரர்கள் ஊடுருவல்காரர்களால் கொல்லப்பட்டனர். மே 9ல் ஊடுருவல்காரர்கள் குண்டுவீசியதில், கார்கிலில் இருந்த ஆயுதக் கிடங்கு சேதமானது. தேசிய நெடுஞ்சாலை ஊடுருவக்காரர்களால் குண்டுவீசித் தகர்க்கப்பட்டது.

கார்கில் தாக்குதல்களின் பின்னே பாகிஸ்தான் உள்ளதாக இந்தியா சொன்னபோது, பாகிஸ்தான் அதை முழுவதுமாக மறுத்தது. இதனால் இந்தியாவால் பாகிஸ்தான் மீது இராணுவ நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை. இந்த இக்கட்டான சூழலில் முக்கியத் திருப்பமாக, கொல்லப்பட்ட ஊடுருவல்காரர்களிடம் இருந்து கிடைத்த ஆவணங்கள் ‘இது பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடுருவல்’ என்பதை உறுதிப்படுத்தியது. இதையடுத்து, இந்திய இராணுவம் ‘ஆபரேஷன் விஜய்’ என்ற தனது அதிரடித் தாக்குதலை தொடங்கியது. இதற்காக 2 லட்சம் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, தயார் நிலையில் இருந்தாலும், கார்கில் பகுதியின் குறுகலான இடங்கள் காரணமாக, இந்திய இராணுவம் சிறு சிறு குழுக்களாகத்தான் முன்னேறி தாக்குதல் நடத்தியது.

இதற்கிடையே, பாகிஸ்தான் இராணுவத்தின் அன்றைய தளபதி முஷரப்பின் தொலைபேசி உரையாடலை, இந்திய உளவுத்துறை கைப்பற்றியது. அதன் மூலம் சர்வதேச அரங்கில் கார்கில் போரின் பின்னே பாகிஸ்தான் இருப்பதை இந்தியா ஆதாரத்தோடு நிறுவியது. இதையடுத்து, அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், அன்றைய பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீபைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, கார்கிலில் இருந்து படைகளைத் திரும்பப்பெறுமாறு வலியுறுத்தினார்.

இதனிடையே, ஆபரேஷன் விஜய் வெற்றியடைந்தது. யுத்தத்திற்கு முதல் ஆளாக சென்ற மேஜர் சரவணன் வெற்றிச் செய்தியுடன் திரும்பினார். ஆனால் அவருடைய பூத உடல் மட்டுமே நமக்கு கிடைத்தது. ஜூலை 14ல் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், ஆபரேஷன் விஜய் வெற்றி அடைந்ததாக அறிவித்தார். ஜூலை 26ல் ஊடுருவல்காரர்கள் கார்கிலில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்தது. அந்த நாள் கார்கில் வெற்றி நாளாகவும் அறிவிக்கப்பட்டது.

கார்கில் போரில் இந்தியா தனது 527 வீரர்களைப் பறிகொடுத்தது. 1,363 பேர் படுகாயம் அடைந்தனர். நமது வீரர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக கார்கில் பகுதியில் நினைவுச் சின்னமும் அமைக்கப்பட்டது. இந்நாளில் உயிரைக் கொடுத்து மண்ணைக் காத்த மகத்தான வீரர்களை நாம் போற்றுவோம்.

Tags: இந்திய ராணுவம்இந்தியாகார்கில் போர்பாகிஸ்தான்
Previous Post

கன்வேயர் பெல்டில் சிக்கிய குழந்தையை மீட்ட விமான நிலைய அதிகாரிகள்

Next Post

நாட்டு மாடுகள் வளர்ப்பை மீட்டெடுக்கும் எம்.பி.ஏ பட்டதாரி – சிறப்பு தொகுப்பு

Related Posts

ட்விட்டர் மீது வழக்குப்பதிவு – காரணம் என்ன?
TopNews

ட்விட்டர் மீது வழக்குப்பதிவு – காரணம் என்ன?

June 29, 2021
இந்தியா கொரோனா பாதிப்பு நிலவரம்
TopNews

இந்தியா கொரோனா பாதிப்பு நிலவரம்

June 4, 2021
இந்தியாவில் குறைந்தது கொரோனா பாதிப்பு
TopNews

இந்தியாவில் குறைந்தது கொரோனா பாதிப்பு

May 25, 2021
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை : மத்திய சுகாதாரத்துறை
TopNews

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை : மத்திய சுகாதாரத்துறை

April 14, 2021
மீண்டும் தலைதூக்கும் கொரோனா – ஒரே நாளில் 60ஆயிரம் பேர் பாதிப்பு!
TopNews

மீண்டும் தலைதூக்கும் கொரோனா – ஒரே நாளில் 60ஆயிரம் பேர் பாதிப்பு!

March 26, 2021
உள்நாட்டு விவகாரங்களில் தலையிட உரிமையில்லை – சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை
TopNews

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட உரிமையில்லை – சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை

October 16, 2020
Next Post
நாட்டு மாடுகள் வளர்ப்பை மீட்டெடுக்கும் எம்.பி.ஏ பட்டதாரி – சிறப்பு தொகுப்பு

நாட்டு மாடுகள் வளர்ப்பை மீட்டெடுக்கும் எம்.பி.ஏ பட்டதாரி - சிறப்பு தொகுப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version