கள்ளக்குறிச்சி மாணவி பிரேத பரிசோதனை அறிக்கைகள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக பெற்றோர் புகார்!

kallakurichi student

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி பிரேத பரிசோதனை அறிக்கைகள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சென்னை பசுமை வழிச்சாலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை, மாணவியின் பெற்றோர் சந்தித்து மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற மனுவை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் பெற்றோர், மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரை சந்தித்ததாக தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய அவர்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், மரணத்திற்கு நீதி கிடைக்க அதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும் என்று இடைக்கால பொதுச்செயலாளர் உறுதி அளித்ததாகவும் தெரிவித்தனர். மேலும் மாணவி மரண வழக்கில் பிணையில் உள்ள பள்ளி நிர்வாகிகளின் ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

Exit mobile version