கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு விசாரணை நிறைவு செய்த காவல்துறை..விசாரணையை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்துவிட்டதாகவும், இரண்டு வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி மரண வழக்கு விசாரணையை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றக்கோரி, மாணவியின் தாயார் தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், பதில் மனு தாக்கல் செய்யும் வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற மாணவி பெற்றோர் தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, வழக்குகளின் விசாரணையை மார்ச் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

Exit mobile version