இடைத்தேர்தல் முடிந்தவுடன் வ.உ.சி. பெயரில் நீதிமன்றம் அமைக்கப்படும்: கடம்பூர் ராஜு

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிந்தவுடன், வ.உ.சி. பெயரில் நீதிமன்றம் அமைக்கப்படும் என்று செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் உடன் இருந்தார். அப்போது பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, அதிமுக அரசின் திட்டங்களால் பயன்பெறாத குடும்பங்களே இல்லை என்றும், அரசின் திட்டத்தின் மூலம் திமுகவினரும் பயன்பெற்றுள்ளதாக கூறினார்.

மேலும் பேசிய அவர், ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைப்பது தொடர்பான கோரிக்கையை, தேர்தல் முடிந்தவுடன் தமிழக அரசு நிறைவேற்றும் என்றும் வ.உ.சி. பெயரில் ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைக்கப்படும் என்றார்.

Exit mobile version