துபாயில் பொங்கலையொட்டி நடைபெற்ற கபடி போட்டி

 பொங்கல் திருநாளை ஒட்டி,  பல்வேறு அமைப்புகள்   சார்பாக துபாயில்  கபடி போட்டி  நடைபெற்றது.

துபாயில் வசித்துவரும் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 16 அணிகள்  கபடி போட்டியில் கலந்து கொண்டன. இறுதிச் சுற்றுக்கு கேரளாவைச்சேர்ந்த இ.எம்.எஸ் பல்லம் அணியும், துபாய் பி.டி. கே அணியும் களமிறங்கின. இதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இ.எம்.எஸ் பல்லம் அணி முதல் பரிசை தட்டிச்சென்றது. சிறப்பு விருந்தினராக இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டனும், அர்ஜூனா விருது பெற்றவருமான ராஜரத்தினம் கலந்து கொண்டார். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான   கோப்பையை துபாய் போலீஸ்  அதிகாரி ஒமர் முகம்மது ஜூபைஅல் மர்ஜூகி  வழங்கினார். நிகழ்ச்சியை சாலிடிராக் இயக்குநர் கிறிஸ்டோபர், ஈரோ டெக் பால் பிரபாகர் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
 

Exit mobile version