திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாக்யராஜ் ராஜினாமா

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக கடந்த மார்ச் மாதத்தில் கே. பாக்யராஜ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசின் சர்கார் படம் மற்றும் இயக்குநர் வருணின் செங்கோல் படத்தின் கதைக்கருவும் ஒன்றுதான் என்று பாக்யராஜ் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தென்னிந்திய சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக பதவியேற்று 6 மாதங்களே ஆன நிலையில், தன்னுடைய தலைவர் பதவியை இன்று பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாக்யராஜ், சங்கத்தின் நலன் கருதியும், தான் சந்தித்த அசௌகரியங்கள் மற்றும் ஒழுங்கீனங்கள் குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை என்றார். சர்கார் பட விவகாரத்தில் தான் கெஞ்சியும் முருகதாஸ் உடன்படவில்லை என்றும், அதனால் சர்கார் கதையை வெளியே சொல்ல வேண்டியிருந்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

Exit mobile version