இந்தியாவில் தாக்குதல் நடத்தப்போவதாக ஜெய்ஷ் இ முகமது மிரட்டல்

டெல்லி உட்பட ஐந்து மாநிலங்களில் தாக்குதல் நடத்தப் போவதாக ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் மிரட்டல் கடிதம் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி, பஞ்சாப், அரியானா உட்பட 5 மாநிலங்களில் தாக்குதல் நடத்தப்போவதாக ஜெய்ஷ் இ முகமது எனும் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் கடிதம் விடுத்துள்ளது. உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் இல்லங்களில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் பயங்கரவாதிகளின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டு தளங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் மே 6 முதல் 13 வரை தாக்குதல் நடத்தப்படும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் இந்த அறிவிப்பு பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version