ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா புகார்

சென்னை மாநகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ள அவர், சசிகலா மற்றும் தினகரன் ஆட்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சசிகலா மற்றும் தினகரனிடமிருந்து பலமுறை மிரட்டல் வந்திருப்பதாகவும், அரசியலில் தனது பெயரை கெடுக்க சூழ்ச்சிகள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த மனுவில் தீபா கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version