ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

திமுக ஆட்சியில் ஊதாரித்தனமாக செய்த செலவுகளால் தமிழக அரசின் கடன்சுமை அதிகரித்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தங்க மோதிரம் அணிவித்து பரிசு பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு திறமையாக செயல்பட்டு வருவதால் விரக்தியின் உச்சத்திற்கு சென்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக விமர்சித்தார். திமுக ஆட்சியில் தொலைக்காட்சி பெட்டி வழங்கியது உள்ளிட்ட பல்வேறு ஊதாரித்தனமான செலவுகளுக்கு அதிமுக அரசு வட்டியுடன் கடனை திருப்பி செலுத்திவருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Exit mobile version