தீவன மோசடி வழக்கு – லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்

தீவன மோசடி தொடர்பான சாய்பாசா கருவூல வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால், சிறைவாசம் அனுபவித்து வரும் லாலு பிரசாத் யாதவ், தீவன மோசடி தொடர்பான சாய்பாசா கருவூல வழக்கில் ஜாமீன் கேட்டு ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கி ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், தும்கா கருவூல நிதி மோசடி வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படாததால், அவர் தொடர்ந்து சிறைவாசம் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Exit mobile version