மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் எல்.இ.டி திரை மூலம் ஒளிபரப்பு

ஜல்லிக்கட்டுக்காக போராடிய மெரினா கடற்கரையில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஜல்லிக்கட்டு போட்டிகளை எல்.இ.டி திரை மூலம் நேரலையில் ஒளிபரப்பியது. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

2017 ஆம் ஆண்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க கோரி லட்சக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை, மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் எல்.இ.டி திரை மூலம் நியூஸ் ஜெ தொலைக்காட்சி நேரலை செய்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டதுடன் ஜல்லிக்கட்டு போராட்ட நிகழ்வுகளை நெகிழ்ச்சியுடன் நினைவுக்கூர்ந்தனர்.

Exit mobile version