வீட்டிலிருந்தபடி கொரோனா பரிசோதனை செய்யலாம்… புனே கோவிசெல்ஃப் கருவிக்கு அனுமதி

கொரோனா பரிசோதனை மையங்களில் மட்டுமே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வீடுகளில் சுயமாகப் பரிசோதனை செய்தல் கூடாது என்றும் ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது, புனேவைச் சேர்ந்த மைலேப் நிறுவனம் தயாரித்த கோவிசெல்ஃப் (CoviSelf (PathoCatch)) கோவிட் -19 OTC Antigen LF என்கிற வீட்டு உபயோக சுயபரிசோதனை கருவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் “கண்மூடித்தனமான சோதனைகள் செய்யக்கூடாது. பயனர் கையேட்டில், உற்பத்தியாளர் விவரித்துள்ள நடைமுறைகளின் படி மட்டுமே வீட்டு சோதனைகள் நடத்தப்பட வேண்டும்” என்றும் ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைத்துள்ளது.

Exit mobile version