உலக கோப்பையில் பங்கேற்க லண்டன் புறப்பட்ட இந்திய அணியினர்

12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் கோலி தலைமையிலான இந்திய அணியினர் லண்டன் புறப்பட்டனர்.

12 வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 30 ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய 10 அணிகள் பங்கேற்க உள்ளன. 24 ஆம் தேதி முதல் பயிற்சி ஆட்டங்கள் தொடங்க உள்ள நிலையில், 30 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்தியா தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை ஜூன் 5 ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது. தொடர்ந்து ஜூன் 9 ஆம் தேதி ஆஸ்திரேலியாவையும், ஜூன் 13 ஆம் தேதி நியூஸிலாந்தையும், ஜூன் 16 ஆம் தேதி பாகிஸ்தானையும், ஜூன் 22ஆம் தேதி ஆஃப்கானிஸ்தானையும், எதிர் கொள்ளும் இந்தியா, ஜூன்27 ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளையும், ஜூன் 30 ஆம் தேதி இங்கிலாந்தையும், ஜூலை 2 ஆம் தேதி வங்க தேசத்தையும், ஜூலை 6ஆம் தேதி இலங்கையையும் எதிர்கொள்ள உள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் லண்டன் புறப்பட்டு சென்றனர்.

Exit mobile version