முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்: இந்திய அணி வீரர்கள் தீவிரப் பயிற்சி

வங்கதேச அணியுடனான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியினர் இந்தூரில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்கிற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் மோத உள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நாளை தொடங்குகிறது. டெஸ்ட் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்தியக் கிரிக்கெட் அணியினர் மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version