அதிபர் டிரம்பை வரவேற்க இந்திய மக்கள் ஆர்வம் : பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்பதற்காக இந்தியாவே ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவியுடன் 2 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். இந்தநிலையில், பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், அமெரிக்க அதிபர் டிரம்பை வரவேற்பதற்காக, இந்திய மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், அஹமதாபாத்தில் நாளை நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், பங்கேற்பது இந்திய மக்களுக்கு மிகப்பெரிய கவுரவம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Exit mobile version