அமைதியை விரும்பும் இந்தியா தேவையெனில் முழு வலிமையையும் பயன்படுத்தும் :ராம்நாத் கோவிந்த்

இந்தியா அமைதியையே விரும்புவதாகவும், தேவையென்றால் முழு வலிமையையும் பயன்படுத்த தயங்காது என்றும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவம், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்ட பாதுகாப்பு படைகளுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய அங்கீகாரம், குடியரசு தலைவரின் கலர்ஸ் பிரசண்டேஷன் விருது. இந்த ஆண்டு, கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இயங்கி வரும், 5 பேஸ் ரிப்பேர் டிப்போ மற்றும் கர்நாடகாவின் ஹக்கிம்பெட் விமானதளங்களுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

Exit mobile version