நாளை 3-வது டி20 போட்டி: இந்தியா-மே.இ.தீவுகள் அணி வீரர்கள் தீவிர பயிற்சி

மும்பையில் நடைபெறும் மூன்றாவது 20 ஓவர் போட்டியில் விளையாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் தொடர்களில் விளையாடுகிறது. முதல் 2 இருபது ஓவர் போட்டிகளில் இரு அணிகளும் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் மும்பையில் புதனன்று நடைபெற உள்ள மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்றுக் கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்கிற இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், இந்திய அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர். முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 209 ரன்களும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 207 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால் மூன்றாவது போட்டியை எந்த அணி கைப்பற்றும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Exit mobile version