2-வது டெஸ்ட் போட்டி: மயங்க் அகர்வால் மீண்டும் சதம் அடித்து அசத்தல்

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில், இந்திய அணி 273 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த புஜாரா, மயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புஜாரா 58 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இளம் வீரர் மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார்.

விராட் கோலி, மயங்க் அகர்வால் இணை சிறப்பாக ஆடி வந்த நிலையில், மயங்க் அகர்வால் 108 ரன்களில் ரபாடா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து விராட் கோலி ரகானே இணை ஜோடி சேர்ந்தது. கேப்டன் விராட் கோலி சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். விராட் கோலி 63 ரன்களுடனும், ரகானே 18 ரன்களும் எடுத்து இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து, 273 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

Exit mobile version