இந்தியாவுக்கு 188 நாடுகள் ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில், புதிய உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் உறுப்பினராவதற்கு 97 வாக்குகள் குறைந்தபட்சம் தேவைப்படும்.

இந்த நிலையில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான வாக்கெடுப்பில் இந்தியா 188 வாக்குகள் பெற்று உறுப்பினரானது. இந்தியா இந்த பதவியில் 2019 ஜனவரி 1 முதல் 3 ஆண்டுகளுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version