புயலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இந்தியா துணை நிற்கும்:பிரதமர் மோடி

ஒடிசாவை புரட்டிய ஃபானி புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் பிரதமர் மோடி விளக்கம் கேட்டுள்ளார்.

ஃபானி புயல் காரணமாக ஒடிசா மாநிலம் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளது. தற்போது மக்களின் வாழ்கை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சேதங்களின் விவரம் குறித்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிடம் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். அப்போது ஒடிசாவுடன் இந்தியா துணை நிற்கும் என அவர் உறுதி தெரிவித்துள்ளர். மேலும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் எனவும் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

Exit mobile version