முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்துவருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்திலும் கேரள மாநிலத்திலும் மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து மூவாயிரத்து 601 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 129 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 4 ஆயிரத்து 482 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு ஆயிரத்து 480 கன அடி நீர் திறக்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version