கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையின் நீர்பிடிப்பு பகுதியான, கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, நந்திஹில்ஸ் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 44.28 அடி கொள்ளளவு கொண்ட அணையில் 41.98 அடிக்கு நீர் உள்ள நிலையில், 408 கன அடி நீர் அணைக்கு வந்துக்கொண்டிருக்கிறது.

அணையின் பாதுகாப்பு கருதி நேற்று வரை 328 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைக்கு வரும் 408 கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், மோரனப்பள்ளி, பாத்தகோட்டா, ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Exit mobile version