தென்மேற்கு பருவமழையால் நெய்யருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில், செங்கோட்டை நெய்யருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள 36 அடி கொண்ட குண்டாறு அணையில் தற்போது 26 அடியாக நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் குண்டாறு அணைக்கு மேலே உள்ள, நெய்யருவியில் குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகள் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பெரும் உற்சாகமடைந்து குளித்து மகிழ்ந்தனர். 

Exit mobile version