எம்.சி.ஆர் ஜவுளி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

ஈரோட்டில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல ஜவுளி தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது எம்.சி.ஆர் ஜவுளி நிறுவனம். இந்த நிறுவனத்தில் வேட்டி,சட்டை,ஜட்டி,பனியன் போன்ற பல்வேறு வகையான ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஜவுளி ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்படுகிறது.இந்த நிலையில் எம்.சி.ஆர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் உள்ளிட்ட 3க்கும் மேற்பட்ட இடங்களில் 30 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.குறிப்பாக நேற்று நள்ளிரவில் இருந்து நடைபெற்று வந்த இந்த சோதனையானது காலையிலும் நடந்தது.இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர்.

Exit mobile version