அவசரமாக தரையிரக்கப்பட்ட விமானத்தில் இருந்து குண்டுகளை வெளியேற்றிய காட்சி வெளியீடு

ஹரியானாவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானத்தின் மீது பறவை மோதியதால், விமானத்தில் நிரப்பப்பட்டிருந்த குண்டுகள் வெளியேற்றப்பட்டு, அவசரமாக தரையிரக்கப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானத்தளம் அருகே, பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாக்குவார் ரக விமானம் மீது பறவை மோதியது. இதில் விமானத்தின் ஒரு எஞ்சின் செயலிழந்தது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட விமானி விமானத்தின் எடையை குறைத்து பத்திரமாக தரையிரக்க முயன்றார்.

அதற்காக விமானத்தில் நிரப்பப்பட்டிருந்த குண்டுகளை வெளியேற்றினார். இதனால் விமானம் பாதுகாப்பாக தரையிரக்கப்பட்டது. இந்த காட்சிகள் தற்போது இந்திய விமானப் படையின் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version