ஹரியானாவில் பறவை மோதிய விபத்தில் விமானத்தின் என்ஜினில் கோளாறு

இந்திய விமானப்படை விமானம் மீது பறவை மோதியதில், விமானத்தின் ஒரு என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானத்தளம் அருகே, பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாக்குவார் ரக விமானம் மீது பறவை மோதியது. இதில், விமானத்தின் ஒரு என்ஜின் செயலிழந்தது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட விமானி, அம்பலா விமானப்படை தளத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

இதில் அவசர நடவடிக்கையாக, விமானத்தின் எடையை குறைக்கும் வகையில், விமானத்தின் எரிபொருள் டேங்க் மற்றும் சிறிய அளவிலான பயிற்சி குண்டுகளையும் கீழே வீச வேண்டிய கட்டயாம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம், பால்தேவ் நகரில் உள்ள குடியிருப்புகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version