எனது கடைசி மூச்சு வரை உங்களுடன் இருப்பேன்: ராகவா லாரன்ஸ் உருக்கமான பதிவு

நடன இயக்குனர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் இப்படி பல திறமைகளை கொண்ட இவர் நல்ல மனிதர் என்றும் கூறலாம்.இவர் தனது சொந்த ஆசிரமத்தில் பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர்களுக்கான படிப்பு செலவு மற்றும் அவர்களுக்கு வேண்டியவற்றை அனைத்தையும் தானாக முன்வந்து செய்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த படத்திலும் இவர் ஒரு ஆசிரம உரிமையாளராகவே நடித்திருப்பார்.இப்படி படத்தில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் பல உதவிகளை ராகவா லாரன்ஸ் செய்து வருகிறார்.

இன்று மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு ராகவா  தனது ட்விட்டர் பக்கத்தில் மனமுருகி பதிவிட்டுள்ளார்.’மாற்றுத்திறனாளியான இவர்கள் எனது வாழ்க்கைப் பயணத்தில் முழுவதுமாக என்னுடன் இருக்கிறார்கள். அவர்களை ஊக்குவிப்பது எனக்கு பெருமையாக உள்ளது.எனது கடைசி மூச்சு வரை அவர்களை ஊக்குவித்து கொண்டு இருப்பேன் ‘என்று கூறி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

Exit mobile version