எனக்கு finals போக விருப்பம் இல்ல : மனம் உடைந்த லாஸ்லியா

இன்று பிக்பாஸ் வீட்டில் 97வது நாள்.ஜூன் 23ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர்.நேற்று 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு கவின் வெளியேறினார்.தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் உள்ளனர்.கவின் வீட்டை விட்டு வெளியேறுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் வீட்டில் உள்ள அனைவரும் நேற்று வருத்தத்தில் இருந்தனர்.இப்படியே நேற்றைய நாள் முடிந்தது.

இன்றைய பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா தர்ஷனிடம் அழுகிறார்.’அவனுக்காகவும் உங்க அப்பாக்காகவும் விளையாடு என தர்ஷன் கூற, எனக்கு finals போக விருப்பம் இல்ல , நான் அப்பா அம்மாக்காகதான் இங்க இருக்கேன் என லாஸ்லியா சொல்லுகிறார், இப்ப நீ இத நனச்சு வருத்தப்பட்டா ஒரு use-உம் இல்லடா,இன்னும் பத்து நாள் தான் இருக்கு,அதுக்கு அப்பறம் என்ன தோணுதோ அத போய் பண்ணு என ஆறுதல் கூறுகிறார்.

பின்பு சாண்டியோ லிவ்விங் ஏரியாவில் நின்றுக்கொண்டு கவினுக்காக பேசுகிறார்.’கவினை நான் கொஞ்சம் நஞ்சம் மிஸ் பண்ணல.நான் final போறப்ப கண்டிப்பா அவனோட medal-ஐ மாட்டிட்டு தான் போவேன்,கவின் லவ் யூ டா நீ இங்க இல்லனாலும் என் மனசுல இருக்க, வெளியே வந்துட்டு பயங்கரமா கேள்விலாம் கேப்பேன் ,அதுக்கு தயாரா இருந்துக்கோ என மனம் உருகி பேச, வீட்டில் உள்ளவர்கள் நெகிழ்ந்து கேட்கின்றனர்.

இவர்களின் சோகத்தை போக்க பிக்பாஸ் 2 போட்டியாளரான ஐஸ்வர்யா துத்தா பெப்பி டான்ஸுடன் உள்ளே வருகிறார்.உடனே அனைவரும் சிரிக்க தொடங்கிவிட்டனர்.பின்பு அவரின் வாழ்க்கை பிக்பாஸுக்கு பிறகு மாறிவிட்டதாக போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொண்டு பிக்பாஸுக்கு நன்றி கூறுகிறார்.

கவின் சென்றதால் லாஸ்லியா இந்த போட்டியில் தொடருவாரா, இல்ல அடுத்தடுத்த வாரங்களில் வெளியே அனுப்பப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Exit mobile version