எங்கள் பிரச்சனையை சால்வ் பண்ண எவளும் வரவேணாம்: அபிராமி கொடுத்த நெத்தியடி

பிக்பாஸ் வீட்டில் இன்று 10வது நாள்.இந்த பிக்பாஸ் சீசனில் முதல் நாளிலே சண்டை தொடங்கியதால் தினம் தினம் ஏதாவது ஒரு பஞ்சாயத்து எழுந்துக்கொண்டே இருக்கிறது.

நேற்று பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது . தள்ளுவண்டியில் உட்கார்ந்திருக்கும் பீம் பாயை கீழே தள்ள வேண்டும் என்பது தான் டாஸ்க்.அதனைவெற்றிகரமாக வனிதா செய்து முடித்ததிற்கு பரிசாக வாழை தார் வழங்கப்பட்டது.மேலும் 600 மதிப்பெண்களும் வழங்கப்பட்டது.

பின்னர் அடுத்த டாஸ்க் செய்வதற்கு தர்ஷன்,சாக்‌ஷி சென்றனர்.அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு மீராவும் சென்றார்.அவர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கானது கமலின் புகைப்படம் மாறி மாறி வடிவமைக்கப்பட்டிக்கும் அதை பஸிலில் சரியாக இணைக்கவேண்டும் என்பது தான்.இருவரும் செய்துக்கொண்டிருந்த போது இடையில் மீரா அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார்.சாக்‌ஷி, தர்ஷன் டாஸ்க்கை செய்து முடிக்கவில்லை .பின்பு கவின் மீராவிடம் நீ ஏன் அவர்களை யோசிக்கவிடாமல் பேசிக்கொண்டே இருந்தாய், என கேக்க அனைவரும் மீரா அவர்களை ஊக்கப்படுத்தியது தவறு என கூற, மீரா கண் கலங்க, மோகன் வைத்யா மீராவை அனைவரின் முன்பு வயதிற்கு மரியாதை கொடுத்து பேசு மீரா என கூறினார்.இந்த சண்டையிலேயே நேற்றைய நாள் முடிந்தது.

இன்றைய முதல் ப்ரோமோவில் அபிராமி மதுமிதாவிடம் கடுமையாக பேசுகிறார்.யாருக்கும் புரியவைக்கனும்னு எனக்கு அவசியம் இல்ல,முகென் என்னுடைய தோழன் .எவளுக்காவது பிரச்சனை இருந்தா உங்களோட வச்சிக்கோங்க.நான் லவ் பண்ணா, நான் லவ் பன்னுறனு மூஞ்ச பார்த்து சொல்லுவன்.எங்களுக்குள் பிரச்சனை அப்படின்னா நாங்க பார்த்திக்கிறோம்.அத சால்வ் பண்ண யாரும் வர வேணாம்.உங்களுக்கு பிராப்ளம் இருந்தா close ur eyes and walk என கூறிவிட்டு வேகமாக நடந்து சென்றுவிட்டார்.அனைவரும் என்ன நடக்கிறது என தெரியாமல் முழித்தனர்.

இரண்டாவது ப்ரோமோவில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசுகின்றனர்.இன்றைய தினம் வினையில் ஆரம்பித்து விளையாட்டில் முடியவுள்ளது.

Exit mobile version