மும்பையில் 3வது நாளாக கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடர்ந்து 3வது நாளாக கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்த நிலையில், 3வது நாளாக இன்றும் மழை நீடிக்கிறது. பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். தொடர் மழையால் மும்பை – புனே இடையே சில விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, மழையால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் மட்டும் 235 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 2ம் தேதி வரை மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version