இந்திய தூதரக உதவியை பெற குல்பூஷண் ஜாதவுக்கு அனுமதி

பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவ், இந்திய தூதரக உதவியை பெறுவதற்கும், தூதரக அதிகாரிகளை சந்திப்பதற்கும் பாகிஸ்தான் அனுமதி வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி கைது செய்யப்பட்ட, இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டது. இதைத்தொடர்ந்து, ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. சர்வதேச ஒப்பந்தங்களின்படி, குல்பூஷண் ஜாதவுக்கு அளிக்க வேண்டிய சட்ட உரிமைகளையும், தூதரக உதவிகளையும் உடனடியாக அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. சர்வதேச நீதிமன்ற உத்தரவுக்கு அடிப்பணிந்த பாகிஸ்தான், குல்பூஷண் ஜாதவ், இந்திய தூதரக உதவியை பெற தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து இன்று மாலை இந்திய தூதரக அதிகாரிகள், குல்பூஷண் ஜாதவை சந்திக்கின்றனர். ஆனால் பாகிஸ்தான் அரசின் வெளியுறவு விதிகளுக்கு உட்பட்டு பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.

Exit mobile version