News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கவர்னர் உரை ஒரு புளுகுமூட்டைப் பிரகடனம் – பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சனம்

Web Team by Web Team
June 22, 2021
in TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கவர்னர் உரை ஒரு புளுகுமூட்டைப் பிரகடனம் – பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சனம்
Share on FacebookShare on Twitter

கவர்னர் உரை திமுகவின் ஒப்பனை செய்யப்பட்ட புளுகு மூட்டைப்பிரகடனம் என்று தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, 

“புதிய அரசு அமைந்த பிறகு முதன் முறையாக தமிழக கவர்னர் நிகழ்த்திய உரை, பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இவ்வுரையானது தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களை பாராட்டுவதை மட்டுமே, ஒட்டு மொத்த நோக்கமாக கொண்டுள்ளது.

சாத்தியமே இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்திருந்தும், மாணவர்களையும், பெற்றோரையும் ஏமாற்றும் நோக்கில் “நீட் தேர்வை ரத்து செய்வோம்” என்று திமுக தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்தது. ஆனால் இப்போது கவர்னர் உரையில் நீட் தேர்வு ரத்து பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இது மிகப்பெரிய ஏமாற்று வேலை.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்போம் என்றும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்போம் என்றும், காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்து மக்களை ஏமாற்றினார்கள். ஆனால் கவர்னர் உரையில் இதுபற்றி வாயே திறக்கவில்லை.

ஏழைத் தாய்மார்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கவர்னர் உரையில் அதுபற்றி பேச்சு, மூச்சே இல்லை. இது ஏழை தாய்மார்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காகவே நடத்தப்பட்ட நாடகம் என்பது ஊர்ஜிதமாகி உள்ளது.

ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துவிட்டு, இப்போது கவர்னர் உரையில் அது பற்றி எதுவும் குறிப்பிடாமல் இருப்பது. ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் ஏமாற்றுகின்ற செயலாகும். இது வருந்தத்தக்கது.

மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தார்கள். ஆனால் இப்போது அது பற்றி கவர்னர் உரையில் எதுவும் குறிப்பிடாமல் இருப்பது, ஓட்டுக்காக மீனவ சமுதாய மக்களையும். திமுக வஞ்சித்துவிட்டது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

சுய உதவி குழுக்களின் கூட்டுறவு சங்க கடன், வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துவிட்டு, இப்போது கவர்னர் உரையில் அதுபற்றி எதுவும் குறிப்பிடாமல் இருப்பது. ஒட்டுமொத்த தமிழக தாய்மார்களையும் ஏமாற்றுகின்ற செயலாக அமைந்துள்ளது.

இதுபோல நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்கள். அதை நம்பிய மக்களையும் இப்போது ஏமாற்றி விட்டார்கள்.

தமிழகத்தில் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் நீக்கப்படும் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தது. அதுபற்றியும் கவர்னர் உரையில் எதுவும் குறிப்பிடாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

தேர்தலுக்கு முன்பு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று திமுகவினர் மக்களிடம் சொல்லி வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்டார்கள். ஆனால் இப்போது டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பது பற்றி கவர்னர் உரையில் எந்த அறிவிப்பும் வெளிவராதது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாதம் ஒருமுறை மின் கணக்கீடு மேற்கொள்ளப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கவர்னர் உரையில் அதுபற்றி எதுவும் குறிப்பிடப்படாததும் ஏமாற்றம் அளிக்கிறது.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சிமெண்ட் விலை, மூட்டைக்கு 370 ரூபாயாக இருந்தது. அது ஒரே இரவில் 520 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய பகல் கொள்ளை. செங்கல், ஜல்லி, மணல், கம்பி உள்பட அனைத்து கட்டுமான பொருட்கள் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. சமையல் எண்ணை முதல் அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக, கவர்னர் உரையில் எந்த அறிவிப்பும் வெளியிடாதது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து சிறு, குறு தொழில்களும் முடங்கிப்போயுள்ளன. அந்த தொழிற்சாலைகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் ஆக்கபூர்வமான எந்த அறிவிப்பையும் கவர்னர் உரையில் வெளியிடவில்லை. அதே போல, வேலைவாய்ப்பை இழந்து நிற்கதியாய் நிற்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் எந்த திட்டங்களையும் கவர்னர் உரையில் அறிவிக்கவில்லை. இது மிகுந்த ஏமாற்றத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற மோடி அரசு விரிவான அறிக்கையை தயார் செய்து அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி உள்ளது. அந்தத் திட்டம் பற்றி கவர்னர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மோடி அரசுக்கு நற்பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்தத் திட்டம் கவர்னர் உரையில் இருட்டடிப்பு செய்யப்பட்டதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்தத் திட்டத்தை திமுக அரசு புறக்கணிக்கிறதோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த திட்டம் புறக்கணிக்கப்ப்படுமானால், இது தமிழக விவசாயிகளுக்கு. திமுக அரசு இழைக்கின்ற மிகப்பெரிய கேடு ஆகும்.

மொத்தத்தில் கவர்னர் உரை, திமுகவின் ஒப்பனை செய்யப்பட்ட புளுகு மூட்டை பிரகடனம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

Tags: bjpgovernor addressL.MuruganTN Assembly
Previous Post

தமிழ்நாட்டில் தடுப்பூசி வழங்குவதில் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு

Next Post

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் கெடு

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!

September 19, 2023
டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்! அஜித் பவாரின் பவர்! மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்!
அரசியல்

டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்! அஜித் பவாரின் பவர்! மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்!

July 3, 2023
பொதுச்செயலாளர் பிறந்தநாளிற்கு பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து!
அரசியல்

பொதுச்செயலாளர் பிறந்தநாளிற்கு பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து!

May 12, 2023
பொதுச்செயலாளர் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் அதிமுக..! பாஜகவுடனான கூட்டணியும் தொடர்கிறது..!
அரசியல்

பொதுச்செயலாளர் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் அதிமுக..! பாஜகவுடனான கூட்டணியும் தொடர்கிறது..!

March 30, 2023
Next Post
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் கெடு

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் கெடு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version