தனியார் வங்கியில் தங்க நகைகள் மாயம் என பொய் தகவல்

திருவண்ணாமலை தனியார் வங்கியில் தங்க நகைகள் மாயமானதாக பொய் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலையில் சன்னதி தெருவில் அமைந்துள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில்கடந்த மாதம் ஆறாம் தேதி நகைகளை சரி பார்க்கும் பொழுது மொத்த நகைகளும் சரியாக இருந்தது. இந்தநிலையில், கடந்த வாரத்தில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மாயமானதாகவும், காவல் துறையினர் ரகசிய விசாரணை நடத்தி வருவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இவ்வாறு அவதூறு செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிச் சக்ரவர்த்தி எச்சரித்துள்ளார்.

Exit mobile version