தனியார் வங்கி சார்பில் இலவச சிற்ப பயிற்சி கூடம்

சிவகங்கையில் தனியார் வங்கி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிற்ப பயிற்சி கூடத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
காரைக்குடி அருகே உள்ள நெசவாளர் காலணியில் தனியார் வங்கி சார்பாக சிற்ப பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. தொன்மை வரலாற்றை பரைசாற்றும் இச்சிற்பக்கலையை வளர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி கூடத்தில் 8 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 மாதங்கள் நடக்கும் இந்த சிற்பக்கலை பயிற்சியில் தங்கும் இடம், உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் பயிற்சி பெரும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதுடன் வங்கி கடனும் அளிக்கப்படுகிறது. மேலும் சுற்றுலா துறை சார்பில் பயிற்சி மையத்தில் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாகும் சிற்பங்கள் அனைத்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் காட்சியளிக்கப்படுகிறது.

Exit mobile version