அரசு பள்ளியில் கேமராக்கள் பொருத்திய முன்னாள் மாணவர்கள்

பெரம்பலூர் அருகே அரசு பள்ளியில், மாணவர்களை பாதுகாக்க சிசிடிவி கேமராக்களை முன்னாள் மாணவர்கள் பொருத்தியுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் சில்லகுடி கிராமத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் வளர்ச்சியில் கிராம மக்களும் முன்னாள் மாணவர்களும் அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். கிராம மக்கள் அவ்வப்போது பள்ளிக்கு தேவையான பொருட்களை சீதனமாக வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி வளாகத்தில் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 35 ஆயிரம் மதிப்பில் 5 கேமராக்களை பொருத்தியுள்ளனர். இதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பு அதிகரித்துள்ளதாக பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version