சீனா சென்ற வெளிநாட்டினர் இந்தியா வர மத்திய அரசு தடை

சீனாவுக்கு கடந்த 2 வாரங்களில் சென்ற வெளிநாட்டினர், இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது.

சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சீனர்கள் மற்றும் சீனாவில் இருந்து வரும் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு அண்மையில் நிறுத்திவைத்தது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 2 வாரங்களில் சீனா சென்றவர்கள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. சீனர்களும் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கெனவே வழங்கப்பட்ட விசாவை ரத்து செய்தும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Exit mobile version