தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களின் கண்காட்சி

தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பு மற்றும் கண்காட்சி மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் முன்னணி நிறுவனங்களின் இருசக்கர வாகனங்கள் இடம்பெற்றன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 25 லட்சம் ரூபாய் வரையிலான வாகனங்கள் இடம்பெற்றது. 1938ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் புதிய வடிவில் வடிவமைக்கப்பட்டு பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Exit mobile version