தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த இரண்டு கடைகளுக்கு அபராதம்

கடலூரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக அரசு கடந்த ஜனவரி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்தது. இந்நிலையில் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த இரண்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Exit mobile version