காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் குவிப்பு

பாதுகாப்பு பணிகளுக்காக காஷ்மீருக்கு கூடுதலாக 25 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடைபெறலாம் என்ற தகவலால் கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில், மேலும் 25 ஆயிரம் வீரர்கள் காமீருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் கூடுதலாக ராணுவ வீரர்கள் குவிக்கப்படுவதால் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

Exit mobile version