கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற வீரபத்ர சுவாமி கோயிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்

கர்நாடகாவில் உள்ள பிரசித்தி பெற்ற வீரபத்ர சுவாமி கோயிலை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்துள்ளதால், பக்தர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடகு மாவட்டம் சிக்மகளூரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்தநிலையில் அங்குள்ள மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வீரபத்திர சுவாமி கோயிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. கோயிலை சுற்றி நீர்வரத்து அதிகமாக உள்ளது. காட்டாற்று வெள்ளம் வருவதற்கு முன்னே சுவாமியை தரிசிக்க சென்ற பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கினர். மீட்பு படையினர் மூலம் பக்தர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கனமழை காரணமாக தற்போது வீரபத்திர சுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய வரவேண்டாம் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version