தைப்பூச விழா: மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் ஒரு நிமிடம் நின்று செல்லும்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 16 விரைவு ரயில்கள், மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையிலிருந்து மதுரைக்கு மேல்மருவத்தூர் வழியாக செல்லும் விரைவு ரயில்களும், மதுரையிலிருந்து சென்னைக்கு மேல்மருவத்தூர் வழியாக செல்லும் விரைவு ரயில்களும், மேல்மருவத்தூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என தென்மண்டல ரயில்வே அறிவித்துள்ளது. தைப்பூச விழாவை முன்னிட்டு, சென்னை எழும்பூர் விரைவு ரயில், மதுரை வைகை விரைவு ரயில், செங்கோட்டை விரைவு ரயில், சென்னை பொதிகை விரைவு ரயில் உள்ளிட்ட 16 ரயில்கள், மேல்மருவத்தூரில் ஒரு நிமிடம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version