அமராவதி அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகமாகி அணை நீர்மட்டம் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த, தூவானம் நீர் விழ்ச்சி, அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாகும். இந்த நிலையில் தற்பொழுது கனமழை, பெய்து வருவதால் தூவானம் அருவியில், நீர்வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு 5,099 கன அடியாக உள்ளது. இதனால் விவசாயிகள் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version