மத்திய அரசு அறிவித்த 6 ஆயிரம் ரூபாயை பெற விவசாயிகள் ஆர்வம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்த 6 ஆயிரம் ரூபாயை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் பயனடைய முதுகுளத்தூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் கிராம நிர்வாக அலுவலர்களிடம் ஆவணங்களை சமர்பித்து வருகின்றனர். அப்பனேந்தல், கேளல் கிராமத்தில் ஆர்வமுடன் ஆவணங்களை சமர்பித்தனர். வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் முதல் தவணைத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளதால் அதற்கான பணிகளில் வருவாய்த்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு அறிவித்த 6 ஆயிரம் ரூபாயை 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Exit mobile version