தஞ்சையில் ஃபானி புயல் முன்னெச்சரிக்கை : படகுகள் ஆற்றில் நிறுத்தம்

தஞ்சையில் ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் தங்கள் படகுகளை ஆற்றங்கரையோரத்தில் நிறுத்திவைத்துள்ளனர்.

பட்டுக்கோட்டையிலுள்ள கடற்கரை கிராமங்களில் ஃபானி  புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் உத்தரவையடுத்து மீனவர்கள் தங்கள் படகுகளை கடல் பகுதியிலிருந்து ஆற்றங்ரைக்கு இடமாற்றம் செய்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும் தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கடலோர கிராமங்களிலும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் தமிழக போலிசார் மற்றும் கடலோர காவற் படையினர் பாதுகாப்பு குறித்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மீன்வளத்துறையினரும், கடலோர காவற் படையினரும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கடற் பகுதிக்கு சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Exit mobile version