அமராவதி அணையில் சரிந்து வரும் நீர்மட்டம்

அமராவதி அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது அமராவதி அணை. இந்த அணையின் தண்ணீரை ஆதாரமாகக்கொண்டு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள், நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெருகின்றன.

இந்த நிலையில், இந்த ஆண்டு பனிப்பொழிவு மற்றும் போதிய மழையின்மை காரணமாக அணையின் நீர் மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது. 90 அடி கொண்ட இந்த அணையின் தற்போதைய நீர் மட்டம், 36.42 அடியாக உள்ளது. பாசனத்திற்காக ஆயிரத்து 998 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், அணைக்கான நீர் வரத்து 8 கன அடியாக குறைந்துள்ளது.

Exit mobile version