கிரீஸ் நாட்டில் புயல் காரணமாக அவசர காலநிலை அறிவிப்பு

கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட புயலால் 7 சுற்றுலாப் பயணிகள் இறந்துள்ள நிலையில், வடக்கு பகுதியில் அவசர காலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரீஸ் நாட்டில் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக ஹல்கி டிகி திகழ்கிறது. இந்நிலையில், அங்கு திடீரென ஏற்பட்ட புயலில் சிக்கி 7 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்துள்ள பலர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

20 நிமிடங்கள் மட்டுமே நீடித்த புயல் பலத்த சேதத்தை உண்டாக்கியுள்ளதாகவும், 5 ஆயிரம் மின்னல் தாக்கியதாகவும் கிரேக்க தேசிய ஆய்வகம் தெரிவித்துள்ளது. மீட்பு பணியில் 140 வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக மீட்புப் பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார். புயலையடுத்து கிரீஸின் வடக்கு பகுதியில் அவசார காலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version