வறட்சியின் காரணமாக பவானியாற்றில் தண்ணீர் குடிக்கும் யானைகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுவதால், யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து பவானி ஆற்றில் நீர் குடித்து செல்கின்றன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாமல், தடுப்பணைகள், வனக்குட்டைகள் நீர் வற்றி காணப்படுகின்றன. இதையொட்டி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டிய, நீலகிரி கிழக்கு வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய யானைகள் பவானிசாகர் அணைப்பகுதியில் உள்ள பவானி மற்றும் மாயாறு பகுதிகளுக்கு வந்து நீர் குடித்துச்சென்றது. யானைகள் நடமாட்டம் அப்பகுதியில் அதிகம் இருப்பதால், ஆடு, மாடு மேய்ப்போர் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version