சிக்னல் கோளாறு: திருவள்ளூர் – சென்ட்ரல் இடையிலான மின்சார ரயில்கள் தாமதம்

சிக்னல் கோளாறு காரணமாக திருவள்ளூர் – சென்ட்ரல் மார்க்கமாக இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னை ஆவடி மற்றும் கொரட்டூர் இடையில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதையடுத்து, திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. ஆவடி- கொரட்டூர் இடையில் சிக்னல் ஒயர் இறங்கியுள்ளதால் இந்தக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிக்னல் கோளாறு காரணமாக திருவள்ளூர் – பொன்னேரி மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில்கள், 12 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ரயில் போக்குவரத்தில் நெரிசல் ஏற்படாமல் இருக்க ரயில்களின் பாதைகளும் மாற்றி இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆவடி – கோரட்டூர் இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சீர்செய்ய இன்று நாள்முழுவதும் பிடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

Exit mobile version