காலியான 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 5-ம் தேர்தல்: தேர்தல் ஆணையம்

மாநிலங்களவையில் உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பீகார் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். மக்களவைத் தேர்தலில் இவர்கள் வென்றதால் மாநிலங்களவை எம்.பி. பதவிகள் காலியாகின.

இதே போல ஒடிசாவில் இரு இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான அறிவிக்கை நாளை மறுநாள் வெளியாக உள்ளது. ஜூலை 5-ம் தேதியே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன

Exit mobile version